ஒரு சமயம் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப்பட்ட ஒருவர், அவர்களைக் கண்டு பயப்பட்டார். திருநபி (ஸல்) அவர்கள், அந்த மனிதரை நோக்கி, ""நான் அரசர் என்று நீர் நினைக்காதீர். காய்ந்த மீனை உண்ணக்கூடிய குறைஷியர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்தான் நான்,'' என்றார்கள். என்னை உங்கள் உயிருக்கு மேலாக, உங்கள் பெற்றோருக்கு மேலாக, உங்கள் பிள்ளைகளுக்கு மேலாக, உலகப் பொருள் அனைத்திற்கும் மேலாக நேசிப்பவரே உண்மை முஃமினாக முடியும்,'' என்றும் அவர்கள் கூறினார்கள்.