Advertisement
கணவனின் கடமைகள்
அக்டோபர் 11,2010,
19:10  IST

* தாய் தந்தையரும், நெருங்கிய
உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு.
அச்சொத்து குறைவாகவோ,
அதிகமாகவோ இருந்தாலும் சரியே...! இந்தப் பங்கு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
*தங்கள் மனைவியரை நெருங்குவதில்லையென்று சபதம் செய்து விலகியிருப்பவர்களுக்கு நான்கு மாதத்
தவணையுண்டு. அதற்குள்(தங்கள் மனைவியரிடம்) அவர்கள் திரும்பி விட்டால் நிச்சயமாக இறைவன்
மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான்.
* நீங்கள் அவர்களுடைய செயல்களைச் சகித்து
புறக்கணித்து விடுவீர்களானால், மேலும்
மன்னிப்பீர்களானால் திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும்
இருக்கின்றான்.
*அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பாவிட்டாலும், பொறுமையைக் கைக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், இறைவன் அதில் அநேக நன்மைகளை
வைத்திருக்கக்கூடும்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து) 

பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement