Advertisement
துன்ப அனுபவம் நன்மைக்காகவே!
ஏப்ரல் 16,2008,
00:11  IST

கண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது நம் கடமையாகும். நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று, தாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை. அதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே, கடவுளும் நம் தாய் போன்றவர் தான்! கோவில் வாசலில் துவாரபாலகர் இருவர் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதில் ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார்.



ஆள்காட்டி விரலைக் காட்டுவதன் தாத்பர்யம் கடவுள் ஒருவரே என்பதைக் காட்டுவதே. மற்றொருவர் கையை விடுத்து நிற்பார். அதன் தத்துவம் கடவுளை தவிர வேறொன்றும் இல்லை என்பதையே காட்டுகிறது. இதையே "ஏகம் ஏவ அத்விதீயம் பிரம்ம ' என்று வேதம் கூறுகிறது. ண தாய் குழந்தையின் நோய் நீங்க வேப்பங்கொழுந்து, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை அரைத்து கொடுப்பாள். அது குழந்தைக்கு மிகுந்த கசப்பும் காரமுமாக இருக்கும். அன்றியும் குழந்தையின் சிறுமதியில் தாய் தன் நன்மைக்குத் தான் இதை தருகிறாள் என்று அறிந்து கொள்ள முடியாது.



காரணம் அதற்கு அறிவு முதிர்ச்சி இல்லை. அது போல், கடவுள் நமக்கு தரும் துன்ப அனுபவங்களும் நம் நன்மைக்காகவே. -வாரியார்

கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement