Advertisement
எல்லாம் இறைவன் செயல்
ஏப்ரல் 30,2009,
18:03  IST

* ""நான் செய்கிறேன். நான் தான் சாதனை புரிந்தேன். என்னாலே தான் இதைச் செய்ய முடிந்தது'' என்று கருதும் ஆணவப் போக்கை மாற்றி, ""இறைவனின் திருவருளால் நன்றாக நடந்தது. இச்செயல் அவனுக்கே சமர்ப்பணம்,'' என்று சரணாகதி அடைவதனால் நம்முடைய அகந்தை அறவே ஒழிந்து விடும்.
* இன்று நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும், வசதியாக வாழ வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் நம் பூர்வஜன்மத்து வாசனையால் உண்டாகும் செயல்களாகும்.
* பொதுவாக, நம்மில் பலரும் இதை சந்திக்காமல் இருக்க முடியாது. வெற்றி கிடைத்தால் என்னால் உண்டானது என்று மகிழ்ச்சியில் குதிப்பதும், தோல்வி என்றால் ஏன் தான் கடவுள் இப்படி சோதிக்கிறான் என்று உள்ளம் குமுறுவதும் உண்டு. இந்தப் போக்கை தவிர்க்க வேண்டும்.
* இறைவன் நமக்கு உடம்பில் சக்தியையும், சிந்திக்கக் கூடிய சிந்தனைத் திறனையும் கொடுத்திருக்கிறார். அதை வைத்துக் கொண்டு நல்லபாதை என்பதை தீர்மானிப்பது நம் கடமையாகும். நாம் செய்யும் செயல்கள் நமக்கும் பிறருக்கும் நன்மை தருவதாக அமைவது தான் சரியான வாழ்க்கை முறை. அதைவிடுத்து, சுயநலமாக வாழ்வது மிருகத்தனமானது.

சின்மயானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement