Advertisement
நமக்குள்ளே ஆனந்தம்
செப்டம்பர் 29,2009,
14:16  IST

* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி தான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். அதைப் போலவே தவறான செயல்களை நற்செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.
* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந்நாமாக்களை உச்சரித்தல், திருக்கோயில்களைத் தரிசித்தல் ஆகிய நல்லசெயல்கள் பாவம் தொலைக்கும் வழிகளாகும்.
* மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும், கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்த உறுப்புக்களினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.
* வெளியில் இருந்து வரும் பொருள்களில் தான் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் போகும். நமக்குள்ளே ஆனந்தம் இருப்பதை மனிதன் மறந்து விடுகிறான்.
* நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம் போன்றது. புறவுலகில் இருக்கும் இன்பம் அனைத்தும் ஒரு நீர்த்துளி போன்றது தான். பதவி, பணம், பெயர், புகழ் என்று வெளியில் நாம் எதிர்பார்க்கும் எல்லாமே ஒரு சொட்டுத் தண்ணீர்தான். இதை முற்றிலும் உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் தேடி அலைவதில்லை.
- காஞ்சிப்பெரியவர்

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement