Advertisement
உண்மையே பேசுங்கள்
மே 20,2010,
16:05  IST

நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்
* உண்மை கசப்பினும் உண்மையையே பேசுங்கள். (நூல்: பைஹகி)
* ஐயத்திற்குரியதை விட்டொழித்து ஐயமில்லாததை பின்பற்றுங்கள். உண்மை அமைதியைத் தருகிறது. பொய் ஐயத்தை உண்டு பண்ணுகிறது. (நூல்: நஸயீ, திர்மிதி)
* எவன் பொய்யுரைத்து மக்களை சிரிக்க வைக்கிறானோ அவனுக்கு கேடுதான்!
* உங்களில் எவரேனும் தம் குழந்தைக்கு பொருள் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் விடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல. (அதுவும் ஒரு வகையில் பொய்யுரைப்பதே)
* வணிகர்களே! சரக்கை விற்பதில் வீண் பேச்சுக்கள் பேசுவதற்கும், பொய்ச்சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும் கலந்து விடுங்கள்.
* மூன்று நிலைகளில் பொய் கூறுவது அனுமதிக்கப்படுகிறது. 1.போரின் போது 2. மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேளைகளில் 3.(ஒருவரை ஒருவர் திருப்தியுறச் செய்யும் நோக்கில்) கணவன் மனைவிக்கிடையில் நடைபெறும் உரையாடல்களில்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)


குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement