* தாயை நாடும் குழந்தையைப்போல இறைவனை அன்புடன் நேசிக்க வேண்டும். பிரார்த்தனை என்பது இதயம் கனிந்த வார்த்தைகளாக இருக்க வேண்டும். * அன்பு இல்லாத மனிதன் மிருகத்திற்குச் சமம். பிறவிப் பயன் பெற மனதை அன்பால் நிரப்புங்கள்.* பஜனையும், பூஜையும் வெறும் சடங்காக இருக்கக்கூடாது. உள்ளம் ஒன்றி ஒருமித்த [...]
* மனிதன் வெறும் உணவை மட்டும் தேடிக் கொண்டிருக்கக்கூடாது. கடவுளை அறிவதற்காக பிறந்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.* மனிதனுக்கு இருகண்கள் இருந்தும் கூட "எல்லாம் நானே' என்ற அகங்காரம் கொண்டு பார்வையற்றவனாக வாழ்கிறான்.* எதைச் செய்தாலும் மனச்சாட்சியிடம் கேட்டு செயல்படுங்கள். உங்களுக்கு தக்க [...]
* நாக்கை அடக்கினால் நாம் ஞானியாக வாழலாம். அதனால் தான் விரதம் இருப்பதற்கும், நாள் முழுவதும் பேசாமல் மவுனம் காப்பதற்கும் பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.* உண்ணும் உணவைப் பொறுத்தே ஒருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. வேண்டாத தீய ஆசைகளுக்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. * நாக்கின் [...]
* கைகளின் அழகு, அதில் அணியும் வளையல்களிலும், ஆபரணங்களிலும் இல்லை. மனமுவந்து பிறருக்கு அள்ளிக் கொடுப்பதில் தான் இருக்கிறது.* தனித்து வாழாதீர்கள். அண்டை வீட்டாரிடம் ஒதுங்கி இருக்காதீர்கள்.* கடவுளை எழுப்புவதற்காகக் காலையில் சுப்ரபாதம் பாடுவதில்லை. அறியாமையில் இருந்து மனிதன் எழவே [...]
* நமக்கு எது வேண்டுமோ அதை கடவுளிடம் கேட்பதில் தவறில்லை. கடவுள் உங்களுடைய தகுதிக்கு ஏற்பக் கொடுத்தருள்வான். * நல்லவழியில் பொருள்தேடி வாழும் வாழ்க்கையே சிறந்தது. குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அதோடு அவமானமும், அவப்பெயரும் சேர்ந்தே வரும்.* பெற்றவர்கள், குழந்தைகளின் உள்ளத்தில் [...]
* பிரார்த்தனை உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து வரும்போது தான் முழுமையானதாக இருக்கும்.* கடவுள் சத்தியத்தின் வடிவம். எனவே, உண்மையைப் பின்பற்றினால் மட்டுமே அவரது அருளுக்குப் பாத்திரமாக முடியும். * செல்வம், அதிகாரம், பட்டம், பதவி எதுவும் நமக்கு நிலையானது அல்ல. என்றென்றும் உலகில் நிலையானவர் [...]
* அகந்தையை அறவே கைவிடுங்கள். அனைத்தும் இறைவன் செயல் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.* ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டால் மனதில் வேறு எந்த சிந்தனையும் எழுவதில்லை. ஒரு பணியை இறைவனுக்காக செய்கிறோம் என்ற உணர்வு உண்டானால், அதன் மதிப்பு கூடிவிடும். * எண்ணம், வாக்கு, செயல் மூன்றாலும் சத்தியம், [...]
* பெண்கள் ஆண்களைப் போல படிக்கலாம். தமது திறமைக்கேற்ப வேலையும் தேடிக் கொள்ளலாம். வரையறைக்கு உட்பட்ட வாழ்வே பெண்களுக்குப் பாதுகாப்பானது.* பெண் கல்வி என்பது விவேகத்தையும், நன்மை தீமைகளை உணர்ந்தறியும் பகுத்தறிவையும் கொடுப்பதாக அமைய வேண்டும்.* நல்ல சமுதாயத்தின் அடிப்படை பண்பும் ஒழுக்கமும். அதனை [...]
* ஒவ்வொரு நாளும், ஒரு வாழ்நாள் கடக்கிறது என்ற உணர்வு உண்டாக வேண்டும். அவற்றைப் பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும். * மனதின் இயல்பே அமைதியற்று இருப்பது தான். எலி ஓரிடத்தில் நிற்காமல் இங்குமங்கும் தாவி ஓடுவது போல, மனமும் இங்கும் அங்கும் தாவித் திரியும் இயல்பு கொண்டது. * மனதைக் [...]
* குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கலாம். இல்லாத ஒன்றை இருப்பது போல பெருமை பேசலாம். ஆனால், ஒருநாள் உண்மை வெளிப்படும்போது, அவமானம் உண்டாவதை யாராலும் தடுக்க முடியாது.* தனிமனித ஒழுக்கமும், கட்டுப்பாடுமே சமுதாயத்தை உருவாக்குகிறது. சமுதாயத்தின் ஒழுக்கமும், கட்டுப்பாடும் பலமான நாட்டை உருவாக்குகிறது. [...]