| |
|
|
| |
 |
|
| |
| |
| |
பாலிவுட்டுக்கு போக ஆசைப்படும் தமிழ் நடிகை |
|
| |
|
|
| |
|
|
| |
|
ஆசை யாரை விட்டது. பருத்தி வீரன் படத்துக்கு முன்பு யாருமே சீண்டாத ப்ரியாமணி, இன்று தேசிய விருது நடிகையாகி விட்டார். புகழின் உச்சிக்கு சென்று விட்ட மகிழ்ச்சியில் இருக்கும் அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். ப்ரியாமணியின் ஆசை பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் வருமாறு:-
ஆழ்கடலின் அதிசய அழகுகளை உள்ளடக்கிய அகண்ட விழிகளுடையவர் நடிகை ப்ரியாமணி. முழுக்க முழுக்க மாடர்ன் பெண்ணான இவருக்கு பாவாடை, தாவணி கட்டி பெருமை சேர்த்தது பருத்திவீரன். ராசியற்ற நடிகை என்ற சென்ட்டிமென்டை உடைத்து இப்படத்தின் மூலம், தேசிய விருது உட்பட பல்வேறு கவுரவங்கள் ப்ரியாமணிக்கு கிடைத்தன. அதேநேரம், கிராமிய வேடங்களை ஏற்க மறுக்கிறார். கிளாமருக்கு முக்கியத்துவம் தர நினைக்கிறார் என, கிசுகிசுக்களும் பரவ துவங்கின.
உண்மை என்ன என்று அவரிடமே கேட்டோம்....
"சினிமாத்துறையில் எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு குருட்டு அதிர்ஷ்டத்தாலோ, ஏதேச்சையாகவோ கிடைத்ததில்லை. இந்த இடத்தை பெற, நான் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். கிராம மக்களுடன் பழக்கமில்லாத சூழ்நிலையில் வளர்ந்தவள் நான். இருப்பினும், பருத்தி வீரன் படத்தில் கிராமியப் பெண்ணாக நடித்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பு என்னை பிரமிக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து, நிறைய வாய்ப்புகள் வந்தன. அவற்றில் பெரும்பாலானவை, கிராமியப் பெண் வேடம். அவற்றில் வலுவான கதை இல்லாததால் நிராகரித்தேன்.
"தற்போது தமிழில் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆறுமுகம்' படத்தில் பரத்துடன் நடிக்கிறேன். இதில் எனக்கு துறுதுறுப்பான வேடம். ஹீரோவுக்கு இணையான வேடமும் கூட. மணிரத்னம் சார் இயக்கும் படத்திலும், நினைத்தாலே இனிக்கும் படத்திலும் நடிக்க உள்ளேன். மலையாளத்தில் வெற்றி கிளாஸ்மேட் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறேன். இரண்டு மூன்று ஹீரோயின்கள் உள்ள படத்தில் நடிப்பதில் எனக்கு எந்த விதமான ஆட்சேபமும் இல்லை. எனது பாத்திரம் வலுவானதாகவும், முக்கியத்துவம் இருப்பதாகவும் அமைய வேண்டும் என்பது தான் எனது கண்டிஷன்,.
பாலிவுட்' ஆசையும் எனக்கு இருக்கிறது. உங்களை விமர்சித்த சேரனுடன் ஜோடி சேர்வீர்களா? அமீருடன் அடுத்த படத்தில் நடிப்பீர்களா' என பலரும் கேட்கின்றனர். முதலில் கதை எனக்குப் பிடித்திருக்க வேண்டும். அப்புறம் என் கால்ஷீட்டில் இடம் இருக்கவேண்டும். மற்றபடி யாருடனும் எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை'' என்றார் அழுத்தமாக.
"தேசிய விருது பெற்ற நடிகையான உங்களுடன் இணைந்து நடிக்க இளம் நடிகர்கள் தயங்குவதாக பேச்சு அடிபடுகிறதே... "இதில் உண்மையில்லை. புரளி கிளப்பி விடுறாங்க சார்... என்றார் வருத்தமாக...!
ஏற்கனவே தமிழ்சினிமாவில் இருந்து இந்திசினிமாவுக்கு சென்று சாதனை படைத்த ஸ்ரீதேவி போல, ப்ரியாமணிக்கு இந்திப்படத்தில் நடித்து புகழ்பெற வேண்டும் என்பதும் ஒரு லட்சியமாம். அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியுடன் காத்திருக்கிறார் அம்மணி.
- தினமலர் சினி டீம் -
|
|
|
|
 |
|
|
|