புதுடில்லி: கட்சிக்காரர்களை ஏமாற்றி எதிர்தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்து செயல் படும் வக்கீல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.இந்திய பார் அசோசியேஷனின் 50வது ஆண்டு விழாவில் பேசிய அவர் கூறியதாவது: வக்கீல்கள் பலர் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், கிரிமினல் வழக்குகளில் எதிர்தரப்பு வக்கீல்களுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் சமீப நாட்களாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
| வாசகர் கருத்து |