கொச்சி : கேரள ஐகோர்ட் நீதிபதி வி.கிரி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்வது, கேரள ஐகோர்ட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.ராஜினாமா குறித்து அவர் அளித்த சிறப்பு பேட்டியில், "சொந்த காரணங்களுக்காக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். வேறு எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை. நீதிபதியாக தொடர்வதில் எந்த அசவுகரியமும் இல்லை. வக்கீலாக பணியாற்றவே விரும்புகிறேன். அதுவும் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றவே விரும்புகிறேன்' என்று தெரிவித்தார்.இரண்டு ஆண்டுகளாக அவர் நீதிபதி பதவி வகித்து வந்தார்.
| வாசகர் கருத்து |