பட்டாவ்டி: அரியானாவில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் குழந்தை உட்பட ஆறு பேர் பலியாயினர். டில்லி - அஜ்மீர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் நேற்று காலை பட்டாவ்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற சிலர் மீது ரயில் மோதியது. சம்பவ இடத்திலேயே ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் பலியாயினர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ரயிலை முற்றுகையிட்டு, ரயில் பெட்டிகள் மீது கல் வீசினர். இதில், பெட்டிகள் சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து, பொதுமக்களை கட்டுப்படுத்தினர். இதனால், டில்லி - ஜெய்ப்பூர் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.
| வாசகர் கருத்து |