ஸ்ரீநகர்: இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாக்., பயங்கரவாதிகள் மூன்று பேரை, இந்திய ராணுவத்தினர் நேற்று சுட்டுக் கொன்றனர். இருநாடுகளுக்கும் இடையில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதி வழியாக, ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை சரணடையும்படி ராணுவத்தினர் கேட்டுக் கொண்டனர். அவர்கள் சரணடையாமல், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் செல்ல முற்பட்டதோடு, ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும் சுட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
| வாசகர் கருத்து |