சென்னை: போதைப் பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், "மாஜி' வளர்ப்பு மகன் சுதாகரன், கோர்ட்டில் நேற்று ஆஜரானார். முன்னாள் முதல்வரின் "மாஜி' வளர்ப்பு மகன் சுதாகரன். "ஹெராயின்' எனும் போதைப் பொருள் வைத்திருந்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், சுதாகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இவ்வழக்கு நீதிபதி நாகராஜ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டில் சுதாகரன் ஆஜரானார். விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி நாகராஜ் தள்ளிவைத்தார்.
| வாசகர் கருத்து |