செங்கல்பட்டு : தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில், "ஏசி' மெக்கானிக் தவறி விழுந்து இறந்தார்.கல்பட்டையை சேர்ந்தவர் திவாகர், 22. "ஏசி'மெக்கானிக். நேற்று முன்தினம் காலை, மகேந்திராசிட்டியில் உள்ள, தனியார் சாப்ட்வேர் நிறுவன "ஏசி' இயந்திரத்தை பழுதுபார்த்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். பலத்த காயமடைந்தவரை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார். செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.