சென்னை:சட்டசபை வைரவிழா, நினைவு வளைவு கட்டுமானப் பணிகள், இம்மாத இறுதியில் துவங்கும் என,
பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள, போர் நினைவுச் சின்னம் - தலைமைச் செயலகத்திற்கு இடையில், சட்டசபை வைரவிழா, நினைவு வளைவு அமைய உள்ளது. இந்த நினைவு வளைவு, 80 அடி அகலம், 41 அடி உயரம் கொண்டதாக இருக்கும். பழமையின் அழகுடனும், புதுமையின் தொழில்நுட்பத்துடன் அமைய இருக்கிறது.
நினைவு வளைவுக்கான, தொழில்நுட்ப விவரங்கள், வடிவமைப்பு வரைகலை பணிகள் முடிந்து, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பொதுப்பணி துறையினர் அளித்த, நான்கு வரைபடங்களில் ஒன்றை, முதல்வர் தேர்ந்தெடுத்தார்.
இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. உரிய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க, முதல்வரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
"முதல்வரின் அனுமதி பெற்று, இம்மாத
இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் துவங்கும்' என, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.