Advertisement
தனியார் நடத்தும் "டிக்கெட் கவுன்டரால்' பயணிகள் தவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2012,22:37 IST

ஆவடி:பட்டாபிராம் ரயில் நிலைய "டிக்கெட் கவுன்டரை', ரயில்வே நிர்வாகமே ஏற்று நடத்த
வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டாபிராம் இந்து கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன், இந்து கல்லூரி ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.
இங்குள்ள "டிக்கெட் கவுன்டர்' தனியார் மூலம், அதாவது ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர்களால் ஒப்பந்த அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கிருந்து கும்மிடிப்பூண்டி, தாம்பரம், அரக்கோணம் பகுதிகளுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது. திருப்பதி, நெல்லூர், மேல்
மருவத்தூர் பகுதிகளுக்கு
டிக்கெட் வினியோகம் கிடையாது.
இதனால், ஆவடி அல்லது பட்டாபிராம் பகுதிக்கு சென்று அங்கிருந்து, டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
காலை 6:00 மணிக்கு பிறகே திறக்கப்படும், டிக்கெட் கவுன்டர் இரவு 11:00 மணிக்கு மூடப்படுகிறது. இதனால், அதிகாலையில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் ஆவடி அல்லது பட்டாபிராம் செல்ல வேண்டியு உள்ளது.
இதுதவிர, எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு டிக்கெட் வழங்கப்படுவதில்லை.
இதுதவிர, ரயில் வருகை குறித்து அறிவிப்பு செய்யப்
படுவதில்லை.
இதுகுறித்து சமூக
ஆர்வலர் ஜெயக்குமார் கூறியதாவது:
இந்து கல்லூரி ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரால் பயணிகள் சிரமப்படுகின்றனர் என, ரயில்வே
பயணிகள் குறைதீர்ப்பு
கூட்டத்தில் பலமுறை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது ரயில் நிலையத்தை பயன்படுத்தும்
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, இனியாவது,
டிக்கெட் கவுன்டரை ரயில்வே நிர்வாகமே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.