ஆவடி : மது அருந்தியதை கண்டித்ததால், மனமுடைந்த இரண்டு பேர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ஆவடி, எச்.வி.எப்., குடியிருப்பை சேர்ந்தவர், தேவராஜ் மகன் நரேஷ், 24. ஏழாம் வகுப்பு வரையே படித்த இவர், வேலை ஏதும் செய்யாமல், வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மது அருந்தி வீட்டுக்கு வந்த நரேஷை, அவரின் தாய் கண்டித்தார்.இதனால், மனமுடைந்த நரேஷ், படுக்கை அறைக்கு சென்று, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஸ்ரீராம் நகர்: ஆவடி, ஸ்ரீராம் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் சேகர், 44. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவருக்கு, மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சேகரை, மனைவி பார்வதி கண்டித்தார்.இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று காலை, வீட்டு முற்றத்தில், சேகர் திடீரென தூக்கு மாட்டி, தற்கொலை செய்து கொண்டார். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.