Advertisement
தமிழ் பற்றாளரை இயக்குனராக நியமிக்க வேண்டும் செம்மொழி நிறுவன பணியாளர்கள் உண்ணாவிரதம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2012,23:49 IST

சென்னை:தமிழ் பற்றாளரை, செம்மொழி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்நிறுவன ஊழியர்கள் உண்ணா
விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"நிர்வாக சீர்கேடுகளால் செம்மொழி நிறுவன பணிகள் தேக்கம்' என்ற செய்தி, "தினமலர்'
நாளிதழில் வெளியானது.
போராட்டம்
இதையடுத்து, செம்மொழி நிறுவன பணியாளர்கள், பணி நிரந்தம், நிரந்தர இயக்குனர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நவ., 26ம் தேதி, மெமோரியல் ஹால் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், நேற்று உண்ணாவிரத போராட்
டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பணியாளர்கள் சங்க தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:
ஆறு ஆண்டுகளாக தின கூலியாகவும், தொகுப்பூதியத்திலும் பணியாற்றி வரும் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழாய்வு பணிகளுக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியை, முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
தொழிலாளர் விரோத போக்குடன் செயல்படும் தலைமையை அகற்ற வேண்டும். தமிழ் பற்றுள்ளவரை, நிரந்தர இயக்குனராக நியமிக்க வேண்டும்.
உதவித்தொகை
நிரந்தர கட்டடம் இன்றி செயல்படும் செம்மொழி நிறுவனத்திற்கு, பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம், அரசு வழங்கியது. ஆனால், அங்கு எந்தவித கட்டட பணிகளும் நடக்கவில்லை.
கட்டடம் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழறிஞர்களுக்கும், ஆய்வாளர்களும் நிதி வழங்கி, புதிய ஆய்வுகளை வெளிகொண்டு வர வேண்டும்.
உலகமெங்கும் செம்மொழி நிறுவனத்தின் பல கிளைகளை அமைத்து, தமிழ் ஆய்வாளர்களுக்கு பணி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ள படி, செவ்வியல் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுகிற முனைவர் பட்ட மேலாய்வாளர்கள், 36 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 60 பேருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
அடுத்த கட்டமாக, டில்லி பார்லிமென்ட் முன், உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.