Advertisement
தினமலர் முதல் பக்கம் »  மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
காரைக்காலில் விவசாயிகள் தவிப்பு... தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012,01:22 IST

காவிரி நீர் வராததால், காரைக்காலில் பயிரிடப்பட்டுள்ள, 9000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் கருகி வருகின்றன.
காவிரியின் கடைமடைப் பகுதியில், காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, விவசாயமே பிரதான தொழிலாகும். சம்பா, குறுவை, தாளடி சாகுபடிகள் காவிரி நீரை நம்பியே நடக்கிறது.இங்கு, ஆண்டுதோறும் 15 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடப்பது வழக்கம். ஆண்டுக்கு 25 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காரைக்காலை பொறுத்தவரை, காவிரி நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது. ஆற்றில் காவிரி நீர் வந்தால் மட்டுமே, சாகுபடி செய்ய முடியும். ஆற்றில் தண்ணீர் வராவிட்டால், வயல்கள் தரிசாக மாறி விடும்.
ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் காரைக்காலுக்கு வருவதுபோல் காட்சி அளித்து, கானல் நீராக மறைந்து விடுவது தொடர் கதையாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்புப்படி, காரைக்காலுக்கு 6 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், காவிரியில் நீர் திறந்து விடுவதற்கு, கர்நாடகா மறுத்ததால், காரைக்கால் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியவில்லை.
9000 ஏக்கர்
இதற்கிடையில், கடந்த செப்டம்பரில், தமிழகத்திற்கு, விநாடிக்கு, 9000 கன அடி நீரை கர்நாடகா திறந்து விட்டது. அரசலாறு, வாஞ்சியாறு, நாட்டாறு, நூலாறு வழியாக செப்டம்பர் மாத இறுதியில், காவிரி நீர் காரைக்காலைத் தொட்டது. இதை நம்பி 9000 ஏக்கரில் சம்பா மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடியை விவசாயிகள் துவக்கினர்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு சில நாட்களிலே தகர்ந்து போனது. 3 நாட்களுக்கு பின் ஆறுகளில் தண்ணீர் வருவது முற்றிலுமாக நின்றது. இதனால், காவிரி தண்ணீரை நம்பி சாகுபடியை துவக்கிய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது.
ஒரு சில இடங்களில் மட்டும், பாசிக் நிறுவனத்தின் போர்வெல் மூலம் விவசாயிகளுக்கு, மணிநேரம் கணக்கு வைத்து, நீர் பாசனம் செய்யப்படுகிறது.
டீசல் பம்ப் செட்
நெடுங்காடு, பொன்பேத்தி, அம்பகரத்தூர், திருநள்ளார் உள்ளிட்ட பல பகுதிகளில் காய்ந்துவரும் விவசாய நிலங்களை காப்பாற்ற, பிரதான ஆற்றின் கரையோரமாக உள்ள விவசாய நிலங்களுக்கு, வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை டீசல் பம்புசெட் மூலம் இறைத்து வருகின்றனர்.
வாய்க்கால்கள் இல்லாத பகுதியில் உள்ள பயிர்கள் காய்ந்து வருகின்றன. நெடுங்காடு, அண்டூர், வடமட்டம், புத்தகுடி, பொன்பேத்தி உள்ளிட்ட இடங்களில் சம்பா விவசாய நிலங்கள் காய்கின்றன.
காவிரி தண்ணீரை காரைக்காலுக்கு கொண்டு வரவும், இல்லாவிட்டால், விவசாய பாசனத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நமது சிறப்பு நிருபர்-

 

மேலும் புதுச்சேரி செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
senthilkumar - karaikalthirunallar,இந்தியா
30-டிச-201208:18:05 IST Report Abuse
senthilkumar nelagal anithum reall eastat akivetum
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கரைசோழன் - karaikal,இந்தியா
30-டிச-201205:58:07 IST Report Abuse
கரைசோழன் நூற்றி எட்டு குளம் நூற்றி எட்டு கோயில் என்ற பெருமை இப்போது பெயரளவிலேயே உள்ள திருபடீனதில் எத்தனை குளங்கள் இன்னும் உள்ளன? அந்த குலைகள் அழியும் போது கொஞ்சமும் அக்கறையும் அறிவும் இல்லாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த மக்கள் இப்போது அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் இப்போதுகூட கொஞ்சம் தங்கள் மண்டையை உபயோகித்து இருக்கும் குளங்களை பராமரிப்பார்கலானால் இன்னும் கேடுகளை சந்திக்காமல் இருக்கலாம் சிந்திப்பார்களா, .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழ்வேல் - chennai,இந்தியா
29-டிச-201203:26:12 IST Report Abuse
தமிழ்வேல் இந்த அழகான பிராந்தியத்தில் இப்போது கொஞ்சம் நிலம்தான் விவசாயத்தில் உள்ளது... நீர்பிரச்ச்னை நீடித்தால் அதுவும் வீடுகளாகிவிடும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
C.KALIYAPERUMAL - Singapore,இந்தியா
28-டிச-201214:22:48 IST Report Abuse
C.KALIYAPERUMAL இது போன்ற திட்டங்களுக்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
SRINIVASAN - Kumbakonam,இந்தியா
28-டிச-201212:39:57 IST Report Abuse
SRINIVASAN கும்பகோணத்தில் காணப்படும் குளங்கள் அனைத்தும் குப்பை தொட்டியாக உள்ளது இப்படி தவறை நாம் செய்து விட்டு இன்றைக்கு காவிரி நீருக்கு கை ஏந்துகிறோம் இந்த நிலை மாறுமா ????????????????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
முருகன் கேசவபிள்ளை - சென்னை,இந்தியா
27-டிச-201219:32:47 IST Report Abuse
முருகன் கேசவபிள்ளை சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல நமக்குக் கிடைக்கும் மழையை வீணாக்காமல், சாக்கடைக்கு மற்றும் கடலுக்கு அனுப்பாமல் அதை அருகிலுள்ள குளத்திலோ, ஏரியிலோ, மதகிலோ, அல்லது பள்ளமான அனைக்கட்டிலோ சேமித்து வைத்தால் இந்த தொந்தரவு வராது. நாம் மற்ற மாநிலங்களை நாடவோ, கெஞ்சவோ, போராடவோ தேவை இல்லை. இதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் அதாவது ஒவ்வொரு ஊரிற்கும் குளம் மற்றும் ஏரியை ஏற்படுத்தி அந்தந்த ஊரில் பொழியும் மழை நீரை வீணாக்காமல் மேற்கண்ட நீரோடைகளில் சேமித்தால் இந்த தட்டுப்பாடு வராது, மக்களும் மடிய மாட்டார்கள். இதை ஒவ்வொரு மனிதரும் புரிந்து சரியான நடவடிக்கைகள் எடுத்தால் தமிழ் மாநிலம் ஒரு பசுமை வாய்ந்த மாநிலமாக மாறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.