சென்னை : யானைகவுனியில், நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்த பார்வை குறைபாடுள்ள மூதாட்டி பலியானார்.யானைகவுனி, கல்யாணபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சின்னப்பொண்ணு, 80. இவரது கணவர் ராதாகிருஷ்ணன் இறந்து விட்டார். பேரன் சீனிவாசனுடன் தங்கியுள்ள, சின்னப்பொண்ணுவுக்கு பார்வை சரிவர தெரியாது.நேற்று காலை, குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து கீழே இறங்கி வர முயன்ற சின்னப்பொண்ணு தவறி, கீழே விழுந்து விட்டார். பலத்த காயமடைந்த சின்னப்பொண்ணுவை, அவரது பேரன் சீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து யானைகவுனி போலீசார் விசாரிக்கின்றனர்.