சென்னை :சென்னையில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில், சென்னையை சேர்ந்த மாணவ, மாணவியர்,"சாம்பியன்' பட்டத்தை வென்றனர்.சென்னை
முகப்பேர் கிழக்கில் உள்ள, பயர்ஸ் போர்ட்ஸ் விளையாட்டு வளாகத்தில், விஸ்
இறகு பந்து கிளப் சார்பில், பல்வேறு வயது பிரிவுகளில், மாணவ,
மாணவியருக்கான, மாவட்ட அளவிலான, இறகு பந்து போட்டி நடந்தது. இதில்,
மாணவியர் போட்டியில், சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா, தீப்தா, வைஷ்ணவி ஆகியோர்,
"சாம்பியன்' பட்டத்தை வென்றனர். ஆண்கள் பிரிவில், சென்னை சேர்ந்த
சித்தார்த் குப்தா, அரவிந்தக்ஷன் ஆகியோரும், திருவள்ளூரை சேர்ந்த,
ரவிரஞ்ஜனும், "சாம்பியன்' பட்டத்தை வென்றனர்.