திரிசூலம் : சென்னையில் இருந்து, குவைத் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், விமானம் மீண்டும்
சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னையில்
இருந்து, நேற்று காலை 7:00 மணிக்கு, 216 பயணிகள், எட்டு விமான
பணியாளர்களுடன், குவைத் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில்
பறந்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த உத்தரவை அடுத்து, சென்னை விமான நிலையத்தில், காலை 8:10 மணிக்கு,
விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.
பயணிகள்
அனைவரும் வெளியேற்றப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
பழுது சரி செய்யப்பட்ட பின், அதே விமானத்தில், மதியம் 12:40 மணிக்கு,
பயணிகள் குவைத் அனுப்பி வைக்கப்பட்டனர்.