மதுரை : மதுரை கே.புதூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் மற்றும் உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர்
அன்சுல்மிஸ்ரா தலைமை வகித்தார். மேயர் ராஜன் செல்லப்பா முன்னிலை
வகித்தார். அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசியதாவது: கல்வித்துறை
நலத்திட்டங்களுக்காக ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. முன்பு இது போல
திட்டங்களை யாரும் வழங்கவில்லை. அதனால் இன்றைய சூழலில் பெற்றோர் பிள்ளைகளை
பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதும். அவர்களுக்கு முதல்வர் ஜெ., இலவச
பொருட்களை வழங்கி வருகிறார்.
கடந்த முறை இந்த ஐ.டி.ஐ.,யில் ஆய்வு செய்த
போது, சில கருவிகள் பழுதடைந்ததாக தெரிவித்தனர். விரைவில், நவீன தொழில்
நுட்ப கருவிகளாக மாற்றி அமைக்க அரசு
நடவடிக்கை எடுத்துள்ளது, என்றார்.
மண்டல பயிற்சி இணை இயக்குனர் ராஜசேகர், தமிழரசன் எம்.எல்.ஏ., தொழிலாளர் நல கமிஷனர் ராஜா, பி.ஆர்.ஓ., செல்வராஜ் பங்கேற்றனர்.