மதுரை : மதுரை
தேனூரைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம்,28. பாஸ்போர்ட் கேட்டு, கோச்சடை
சேவா மையத்திற்கு வந்தார். அப்போது, இவரிடம் சதீஷ்குமார் என்பவர் ரூ.500
பெற்று, புரோக்கராக செயல்பட்டதாக, கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர்.
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்,37. இவரிடம்
பாஸ்போர்ட் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.5000 பெற்றதாக, கணேஷ்குமார் என்பவர்
மீதும் வழக்குப்
பதிவு செய்யப்பட்டது.