Advertisement
கொடுங்கையூரில் 25 சவரன் திருட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2013,22:13 IST

சென்னை:கொடுங்கையூரில் அரசு அதிகாரி வீட்டில், 25 பவுன் நகை மற்றும் பணத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதே பகுதியில், பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கிய, மர்ம நபர்கள், மூன்று சவரன் நகையை திருடி சென்றனர்.கொடுங்கையூர், சூழ்புனல்கரை, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் விக்டர். இவர், அரசு வேளாண் துறை அதிகாரி. இவரது தம்பி டைட்டர்ஸ். சொந்த வீட்டில், தம்பி மேல் மாடியிலும், அண்ணன் கீழேயும் வசித்து வருகின்றனர். பொங்கலுக்காக, இருவரும் வீட்டை பூட்டி விட்டு, காஞ்சிபுரத்திற்கு சென்றனர்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு திரும்பிய போது, இரண்டு வீடுகளின் கதவுகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு, மொத்தம், 25 பவுன் நகை மற்றும் பணம், 55
ஆயிரம் ரூபாய், திருடு போயின.கைரேகைபோலீசாரின் முதற்கட்ட சோதனையில், மூன்று பேர்களின், கைரேகை பதிவுகள் கிடைத்தன. அதை வைத்து, போலீசார் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கு முன், எம்.கே.பி., நகரில் கல்யாண வீட்டுக்கு சென்றவர் வீட்டிலும், கிருஷ்ணமூர்த்தி நகரில், மாமியார் வீட்டுக்கு சென்றவர் வீட்டிலும், திருட்டு நடந்தது. அவற்றில் யாரும் சிக்காத நிலையில், தற்போது வெளியூர் சென்றிருந்த, அரசு அதிகாரி வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.ஓட்டை பிரித்து...கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார், 46; ஓவியர். இவரது மனைவி ராணி, 40. இவர், நேற்று மதியம், 12.30 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். ஒரு மணி நேரத்திற்கு பின், வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் மேற்கூரை ஓடு பிரிக்கப்பட்டு இருந்தது.வீட்டின் உள்ளே இருந்த பீரோவில், மூன்றரை சவரன் சங்கிலி காணாமல் போயிருந்தது. இதுகுறித்தும், கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
LAX - திருச்சி,இந்தியா
18-ஜன-201316:31:14 IST Report Abuse
LAX அக்கம்பக்கம் வசிப்பவர்களும் தங்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்பதில் உஷாராக இருக்க வேண்டும். நமக்கென்ன என்று வீட்டுக்குள் பூட்டிக்கொண்டிருந்தால், பகலிலே இப்படி துணிகர கொள்ளை நடப்பது யார் கண்களிலும் படுவதில்லை. கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், தெருவுக்குத்தெரு காவலர்களை கண்காணிப்புக்கு அமர்த்துவது சாத்தியமில்லாத ஒன்று. அதனால் பொதுமக்களும் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். Frie n ds of Police இயக்கத்தில் இணைந்திருக்கும் இளைஞர்கள் அந்த டி-ஷர்டை பந்தாவாக போட்டுக்கொண்டு திரிவதை விட்டுவிட்டு, பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளிலும் போலீசாருக்கு உறுதுணையாக செயல்படுவது அவசியம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.