பொள்ளாச்சி:மருமகளை கொடுமை படுத்திய கணவன் உள்ளிட்ட உறவினர்கள் ஐந்து பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பொள்ளாச்சி பழனிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார்,46, இவருக்கும் கோவையை சேர்ந்த பிருந்தா தேவிக்கும் திருமணமாகி 1 2 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பிருந்தாதேவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகாரில், "என் கணவனின் தந்தை கேசவன், தாயார் மீனா, நாத்தனார் ஜெயஸ்ரீ, நளினி ஆகிய ஐந்து பேர் என்னை வாழ விடாமல் கொடுமை செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த அனைத்து மகளிர் போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.