Advertisement
தினமலர் முதல் பக்கம் » சென்னை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் பார்வையற்ற ஆசிரியர் சங்கம் கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2013,23:33 IST

சென்னை : ""அரியானாவை போலவே, தமிழகத்திலும், பார்வையற்ற ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும்,'' என, பார்வை யற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜயகுமார் கூறினார். பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில், பணி ஓய்வு பெறும் மூத்த ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, மாநில கல்லூரியில், கடந்த, 27ம் தேதி நடந்தது. நிகழ்ச்சி முடிவில், பார்வையற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜயகுமார் கூறியதாவது:
பார்வையற்ற ஆசிரியர்கள் பயண படிக்காக, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையை பெறுவதில், பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதை எளிமைப்படுத்தும் வகையில், அடையாள அட்டையின் நகலை பெற்று கொண்டு, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்கள்பயணப்படி வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வையற்ற சிறப்பு பள்ளிகளில் பயிலும், பார்வையற்ற மாணவர்களுக்கான, சுற்றுலா நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். அரியானாவில், அரசு ஊழியராக பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளின் ஓய்வு பெறும் வயது, 60 என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, தமிழகத்தில் பணியாற்றும் பார்வையற்ற ஆசிரியர்களின், ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும்.
சிறப்பு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பள்ளிகளில் வழங்குவது போல, பார்வையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசிப்பாளர் உதவித் தொகையாக மாதந்தோறும், 1,500 ரூபாய் வழங்க வேண்டும். அரசு பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த வட்டியில், வீட்டு கடன் வழங்க ஆவன செய்ய வேண்டும்.
பார்வையற்றவர்கள், கல்வியை முடித்து பணியில் சேர்வதற்கு மிகவும் தாமதமாவதால், 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தாலே, முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.