சென்னை : "சென்னை
மாவட்டத்தில், இரு கட்டங்களாக நடக்கும் பிளஸ் 2 செய்முறை தேர்வில், 30
ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்பர்' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,
ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிவிப்பு: பிளஸ் 2
செய்முறை தேர்வு, அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளிலும், இரு கட்டங்களாக
நடக்கின்றன. முதல் கட்ட தேர்வுகள், பிப்.,1 முதல், 8ம் தேதி வரையிலும்,
இரண்டாம் கட்ட தேர்வுகள், பிப்.,9 முதல், 16 வரையிலும் நடக்கும். மாவட்டத்தில், 406 பள்ளிகளில் இருந்து, 30 ஆயிரத்து 13 மாணவ, மாணவியர், செய்முறை தேர்வில் பங்கேற்பர். 300 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பிரதான பொது தேர்வை, 51 ஆயிரத்து 604 பேர் எழுதுகின்றனர்.செய்முறை
தேர்வில், 1,400 முதுகலை ஆசிரியர் ஈடுபடுத்தப்படுவர். முதன்மை கல்வி
அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், ஆங்கிலோ
இந்தியன் பள்ளி ஆய்வாளர் ஆகியோர், தேர்வு மையங்களை பார்வையிடுவர். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.