Advertisement
தினமலர் முதல் பக்கம் »  மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
சத்திய ஞான சபையில் ஆன்மிகப் பாடசாலை திறப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,03:23 IST

புதுச்சேரி : மொரட்டாண்டி டோல்கேட் அருகே சத்திய ஞான சபையில் ஆன்மிகப் பாடசாலை திறப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
புதுச்சேரி அடுத்துள்ள மொரட்டாண்டி டோல்கேட் அருகே பாரத மாதா நகரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் நன்னீராட்டு விழா மற்றும் தர்மச்சாலை ஆன்மிகப்பாடசாலை திறப்பு விழா நேற்று நடந்தது. அருட்பா அருணாசலம் முன்னிலை வகித்தார். சிவ தனநடராஜன் ஞானதீபம் ஏற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.
விழாவையொட்டி நேற்று காலை 6 மணியளவில் சத்திய ஞானசபையில் அமுத நன்னீராட்டு விழா, டாக்டர் தன கஜபதி முன்னிலையில் நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலைய சுவாமிகள், சத்திய தர்மச்சாலை வள்ளலார் சிலையை திறந்து, ஆசியுரை வழங்கினார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சத்திய ஞான சபையின் பெயர் பலகையைத் திறந்து வைத்து, வாழ்த்துரை வழங்கினார். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், வானூர் எம்.எல்.ஏ., ஜானகிராமன், மாவட்ட கவுன்சிலர் பக்தவச்சலம், வானூர் ஒன்றிய சேர்மன் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி, திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் லலிதா, ஒன்றிய கவுன்சிலர் கவுரி, ஊராட்சி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் புதுச்சேரி செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.