Advertisement
மாணவர்களுக்குபேச்சுப் போட்டி கடலூரில் நாளை நடக்கிறது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,03:47 IST

கடலூர் : தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் கவிதைப் போட்டி நாளை 2ம் தேதி கடலூரில் நடக்கிறது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உமா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாணவர்களிடம் உள்ள தமிழில் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்ட அளவிலான போட்டி நாளை 2ம் தேதி காலை 9:00 மணிக்கு, கடலூர், மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக 7,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவார்கள்.
அதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 12 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நாளை நடைபெறும் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் காலை 9 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.