வடபழனி:முன்விரோதம் காரணமாக, ஒருவரை, அரிவாளால் வெட்டியது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
வடபழனி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., 117வது வட்ட செயலர் சந்திரன். இவரது தம்பி ரமேஷ், 42. நேற்று முன்தினம், வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள, "டாஸ்மாக்' கடையில் இருந்துள்ளார்.
இரவு, 8:30 மணிக்கு, சூளைமேட்டை சேர்ந்த பிணு, 34, உட்பட நான்கு பேர், அங்கு வந்து, அரிவாளால், ரமேஷை தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
தலையில் ஆறு இடத்தில் வெட்டுப்பட்ட அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெட்டிய கும்பல் தலைமறைவாகி விட்டது.
கடந்த, 2008ல், பிணுவின் நண்பன் சரவணனை, ரமேஷ் வெட்டிய சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், பிணு, ரமேஷை வெட்டியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து, வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.