Advertisement
தினமலர் முதல் பக்கம் » கடலூர் மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
கரும்பு பயிரில் ஊடு பயிராக உளுந்து பயிர் மேல்பட்டாம்பக்கம் விவசாயிகள் ஆர்வம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,01:10 IST

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் விவசாயிகள், கரும்பு பயிரில் ஊடுபயிராக உளுந்து பயிரிட்டு வருகின்றனர். கரும்பு நடவு நட்டது முதல் வளர்ந்து நிழல் தரும் வரை அதிகளவு களை வளரும். களை எடுக்க அதிக ஆட்கள் தேவைப்படுவதால் செலவு அதிகமாகிறது. தொடர்ந்து உரங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிடுவதால் மகசூல் குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய தழைச்சத்து பயிர்களான சணப்பை தக்கப்பூண்டு பயிர்களை கரும்பு நடவு செய்தவுடன் விதைக்கலாம். 90 நாட்களில் இதை உழுவதன் மூலம் பயிருக்கு அதிக தழைச்சத்து கிடைக்கிறது. மேலும், இச்செடிகள் வளர்ந்து நிழல் தருவதால் கரும்பு பயிரில் பூச்சிகள் தாக்குவதில்லை. நிலமும் வளம் பெரும். மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் விவசாயிகள் கரும்பு பயிரில் ஊடுபயிராக உளுந்து பயிரிட்டுள்ளனர். இதனால் களை கட்டுப்படுத்தப்படுகிறது. களை எடுக்கும் செலவும் குறைகிறது. உளுந்து பயிர் மூலம் வரும் வருமானம் கரும்பு பயிர் பராமரிப்புக்கும் உதவுகிறது. உளுந்து பயிரின் வேரில் இருக்கும் முடிச்சுகள் காற்றில் இருக்கும் நைட்ரஜனை கிரகித்து கரும்பு பயிருக்கு தருவதால் உரசெலவும் குறைகிறது.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.