மதுரை: மதுரை மாவட்டத்தில், முதன்முதலாக யூனியன் அளவிலான மனுநீதி நாள் பிப்.,14ல் துவங்குகிறது.ஏற்கனவே தாலுகா அளவில் மனுநீதிதிட்ட முகாம் நடந்து வருகிறது. இருந்தபோதிலும், பொது மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நலத்திட்ட உதவிகள், பட்டா மாறுதல், ஓட்டுனர் உரிமம், வங்கிக் கடன், காப்பீடு திட்ட அட்டை என பலவாறு கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் வருகின்றன.எனவே கூடுதலாக மனுநீதி திட்ட முகாமை நடத்த, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து முதன்முறையாக, யூனியன் அளவில் பிப்., 14 முதல் மனுநீதி திட்ட முகாம் நடக்கிறது.மதுரை மேற்கு யூனியனில், திருப்பாலை யாதவர் ஆண்கள் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடக்கிறது. அன்று அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் மனுக்களை வழங்கலாம்.
இதில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பர் என்பதால், மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.