Advertisement
தினமலர் முதல் பக்கம் » மதுரை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
மீண்டும் தொடங்கியது குடிநீர் வினியோகம் மூன்று நாள் தத்தளிப்புக்கு முற்றுப்புள்ளி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,05:20 IST

மதுரை: மதுரை மாநகராட்சியில், மூன்று நாட்களாக நிறுத்தப்பட்ட குடிநீர் வினியோகம், நேற்று மாலை முதல் மீண்டும் தொடங்கியது.வைகை அணையிலிருந்து, மாநகராட்சிக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் இணைப்பில், பல இடங்களில் கசிவு ஏற்பட்டது. குடிநீர் வினியோகத்திற்கு இடையூறாக இருந்த அவற்றை சரிசெய்யும் பணி, பிப்., 4, 5 ல் நடந்தது. ஏ.வாடிப்பட்டி, புதூர், பூவம்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கச்சி
ராயிருப்பு, மண்ணாடிமங்கலம் வெளிப்பாதையில் உள்ள குழாய்களின் கசிவு சரிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதல் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் தொடங்கியது. மண்டலம் 1ல், கோச்சடை, எச்.எம்.எஸ்., காலனி, விராட்டிபத்து, பொன்மேனி, சம்மட்டிபுரம், அரசரடி, கரிமேடு, புட்டுத்தோப்பு, எஸ்.எஸ்.காலனி, எல்லீஸ்நகர் பகுதியிலும், மண்டலம் 2ல், அருள்தாஸ்புரம், தத்தனேரி, செல்லூர், அகிம்சாபுரம், கோரிப்பாளையம், ராஜாஜி பூங்கா, கே.கே.நகர், அண்ணாநகர், புதூர், வண்டிப்பாதை, கிருஷ்ணாபுரம் காலனி, பிபிகுளம் உள்ளிட்ட பகுதிகள், மண்டலம் 3ல், நெல்பேட்டை, கீழவாசல், மைனா தோப்பு, மகால், பழைய குயவர் பாளையம், தெப்பக்குளம், அனுப்பானடி பகுதிகள், மண்டலம் 4ல், திடீர் நகர், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஜான்சி ராணி பூங்கா, எம்.கே.புரம், ஜெய்ஹிந்த்புரம், சுந்தராஜபுரம், டி.வி.எஸ்.,நகர், முத்துப்பட்டி, பழங்காநத்தம், மாடக்குளம், பைகாரா பகுதிகளில் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், மூன்று நாட்களாக குடிநீரின்றி மக்கள் தத்தளித்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது. இனியாவது சீரான குடிநீர் கிடைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.