Advertisement
நிட்-டெக் கண்காட்சி நாளை துவங்குகிறது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2013,22:16 IST

திருப்பூர்: "ஹைடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் இந்தியா' சார்பில், 12வது நிட்-டெக் கண்காட்சி, திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள கண்காட்சி வளாகத்தில் நாளை துவங்குகிறது; வரும் 25ம் தேதி வரை நாட்கு நாட்கள் கண்காட்சி நடைபெறும். 20 நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அரங்கு அமைக்கும் பணி படுமும்முரமாக நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும், நவீன ரக இயந்திரங்கள் தருவிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.

நிட்-டெக் கண்காட்சி மற்றும் ஏற்பாடு குறித்து, அதன் தலைவர் ராயப்பன் கூறியதாவது:


திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் நாளை துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியில், அமெரிக்கா, ஜெர்மன், இத்தாலி, ஆஸ்டிரியா, துருக்கி, செக்கோஸ்லோவாகியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த முன்னணி பின்னலாடை இயந்திர தயாரிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.


உள்நாட்டளவில், மும்பை, டில்லி, சூரத், லூதியானா, ஆமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் இருந்தும், பின்னலாடை உற்பத்தி செய்யும் நவீன இயந்திரங்களும், அதன் துணை இயந்திரங்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. பின்னலாடை உற்பத்தியின் முதுகெலும்பான "நிட்டிங்'கில் துவங்கி, "டையிங்', "காம்பாக்டிங்', "பிரின்டிங்', "எம்ப்ராய்டரி', "சூயிங்', "லே-கட்டிங்' வரை அனைத்து விதமான நவீன இயந்திரங்கள் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.


மொத்தம் 400 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 ஆயிரம் பேர் வரை கண்காட்சியை கண்டுகளிப்பர் என எதிர்பார்க்கிறோம். தினமும் காலை 10.00 முதல் மாலை 6.30 மணி கண்காட்சி நடைபெறும். வரும் 23ம் தேதி நிப்ட்-டீ கல்லூரி சார்பில், "பேஷன் பெஸ்ட்' என்ற பேஷன் ஷோ நடக்கிறது. திருப்பூர் பின்னலாடை தொழில் துறை மேம்பாட்டுக்கு உதவும் வகையில், "நிட்-டெக்' கண்காட்சி அமையும் என நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.