Advertisement
பொதுத்தேர்வை கண்காணிக்க பறக்கும்படை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2013,22:17 IST

திருப்பூர்: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க, கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பகங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ல் துவங்கி 27 வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 27ல் துவங்கி ஏப்., 12 வரை நடக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில், 9,964 மாணவர்கள்; 12 ஆயிரத்து 46 மாணவியர், தனித்தேர்வராக 960 பேர் என 22 ஆயிரத்து 970 பேர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 11 ஆயிரத்து 46 மாணவர்கள்; 11 ஆயிரத்து 852 மாணவியர் என 22 ஆயிரத்து 898 பேர், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 3,427 மாணவர்கள்; 3,652 மாணவியர், தனித்தேர்வர்கள் 1,300 என 31 ஆயிரத்து 277 பேர் தேர்வு எழுதுகின்றனர்.ஏழு இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரட்டை பூட்டு முறையில், இரு காப்பாளர்கள் வீதம் 14 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காப்பகங்களுக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பிளஸ் 2 தேர்விற்கு, முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக 97 தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 97 ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்களாக 1,146 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க, முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக 76 தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 152 ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்களாக 1,570 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. மீறினால் போலீசார் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். சில மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை குறித்து தேர்வு மையங்களில் சுவரொட்டி ஒட்டப்படும்.தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க, கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனி பறக்கும் படைகள் அமைக்கப்படும். பறக்கும் படையினர் எந்நேரத்திலும் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வர். பிளஸ் 2 தேர்வுக்காக, முதன்மை கல்வி அலுவலர் மூலமாக, 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக, 152 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்படும், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.