நெய்வேலி:நெய்வேலி நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தேவர் சிலையை என்.எல்.சி., நிர்வாகம் அகற்றியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 3ல் உள்ள, எம்.ஜி.ஆர்., திடலில் நேற்றிரவு, மர்ம நபர்கள் தேவர் சிலையை நிறுவி விட்டு சென்றனர். தகவலறிந்த என்.எல்.சி., நகர நிர்வாக அதிகாரிகள், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடன் சம்பவ இடத்திற்குச் சென்று தேவர் சிலையை அகற்ற முயன்றனர். இதனையறிந்த, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் தேவர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். என்.எல்.சி., நகர நிர்வாக அதிகாரிகள், முறையான அனுமதி பெற்ற பின்னரே தேவர் சிலை அமைக்க வேண்டுமென கூறியதைத் தொடர்ந்து, மூ.மு.க., நிர்வாகிகள் கலைந்துச் சென்றனர். இதையடுத்து, தேவர் சிலை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.