பேரையூர்:ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.,) வீரர் பெருமாளின் உடல், சொந்த ஊரான மதுரை தும்மநாயக்கன்பட்டியில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்த பெருமாளின் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சி.ஆர்.பி.எப்., வாகனத்தில் 20 வீரர்கள், மதுரை இடையப்பட்டியில் உள்ள முகாமிற்கு, அவரது உடலை கொண்டு வந்தனர். அங்கு மரியாதை செலுத்தப்பட்டு, தும்மநாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, பாலகிருஷ்ணன் எஸ்.பி., உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு அறிவித்த, 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை, பெருமாளின் தந்தை லிங்கத்திடம், கலெக்டர் வழங்கினார். தமிழக போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப்., சார்பில் 88 குண்டுகள் முழங்க, உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ.,க்கள் ஆறுமுகம், ராஜேந்திரன், தாசில்தார்கள் சவுந்திரராஜன், சத்தியசீலன் பங்கேற்றனர். பெருமாள் சுட்டு கொல்லப்பட்டது, கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.