சென்னை:வண்டலூர் உயிரியல் பூங்காவை, முதல்வர் ஜெயலலிதா நேற்று பார்வையிட்டு, ஏழு புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டியதோடு, யானை, நீர் யானைகளை பார்வையிட்டார்.சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்கா, 602 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. 45 வகை பாலூட்டிகள், 70 வகை பறவையினங்கள், 29 வகை ஊர்வனங்கள் என, மொத்தம், 144 வகை உயிரினங்களை சேர்ந்த, 1,398 விலங்குகள் பராமரிக்கப் படுகின்றன.அழியும் நிலையில் உள்ள விலங்குகளை, இனவிருத்தி செய்யும் மையமாகவும் வண்டலூர் பூங்கா திகழ்கிறது.வண்டலூர் உயிரியல் பூங்காவை, முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை பார்வையிட்டார். வெள்ளைப்புலி கூண்டு அருகே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த முதல்வர், அருகே சிறிய கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த, ஏழு புலி குட்டிகளை பார்வையிட்டார்.பின், ஒவ்வொரு புலி குட்டியையும், கூண்டில் இருந்து திறந்துவிடும் போது, அவற்றிற்கு பெயர் சூட்டினார்.வெள்ளைப் புலி குட்டிகளுக்கு, ஆர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா என்றும், கலப்பின சேர்க்கை மூலம் பிறந்த புலி குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, ஆர்த்தி என, முதல்வர் பெயர் சூட்டினார்.பின், புலி குட்டிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, அவை விளையாடியதையும் சிறிது நேரம் கண்டு ரசித்தார். இதைதொடர்ந்து, யானை, நீர் யானைகளை முதல்வர் பார்வையிட்டார். மேலும், வனத் துறை சார்பில், பல்வேறு இடங்களில், 21 கோடியே, 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு, அடிக்கல் நாட்டியதோடு, 1 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங் களையும், திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள், வனத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.