Advertisement
குறள் அதிகாரம் : நட்பு
எழுத்தின் அளவு:   A+  A-

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

( குறள் எண் : 786 )

மு.வ : முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

சாலமன் பாப்பையா : பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement