Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்
நெல் கொள்முதல் விலை உடனே அமலாக்க உத்தரவு
ஜூலை 04,2008,19:40   IST
சென்னை: நெல் கொள்முதலில் குவின்டாலுக்கு ஆயிரம் ரூபாய் ஆதார விலை வழங்குவதை, உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காரீப் பருவத்துக்கு நெல் கொள்முதலின்போது, உயர்ரக நெல் குவின்டாலுக்கு 880 ரூபாயும், சாதாரண நெல் வகைக்கு 850 ரூபாயும் வழங்குவதற்கு, குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு, இந்த குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக கொள்முதல் விலையை நிர்ணயித்தது. இதன்படி, உயர்ரக நெல் வகை குவின்டாலுக்கு ஆயிரத்து 50 ரூபாய் என்றும், சாதாரண வகை நெல்லுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகை, இந்த ஆண்டு குறுவை பருவத்தில் இருந்து வழங்கப்படுமென உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதை உடனே அமல்படுத்த மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசும் இதை உடனே அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, உயர்ரக நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 50 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு ஆயிரம் ரூபாயும் கொள்முதலின்போது வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு உணவுத் துறை கமிஷனர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
சென்னை ஓபன் ஸ்குவாஷ் : அரையிறுதியில் தீபிகா
ஜூலை 04,2008,19:22   IST
சென்னை : சென்னையில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் ஸ்குவாஷ் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. தொடரின் காலிறுதிப் போட்டியில் ஹாங்காங் வீராங்கனை கிறிஸ்டினா மாக்கை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை தீபிகா பள்ளிகால் 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 9-7, 9-5, 9-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றுப்போட்டியில் தீபிகா நெதர்லாந்து வீராங்கனை ஆர்லா நூமை எதிர்கொள்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் 23/0
ஜூலை 04,2008,19:13   IST
கராச்சி : கராச்சியில் நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது.
முதல்வர் கருணாநிதி மதுரை வருகை
ஜூலை 04,2008,18:56   IST
சென்னை : சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, மதுரை தமுக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் கருணாநிதி மதுரை வருகிறார். விழா பற்றிய முழு விபரம் இன்னும் முடிவாகவில்லை. மு.க.அழகிரி ஏற்கனவே அறிவித்தபடி, டி.எம்.சவுந்திரராஜனுக்கு பாராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை மதுரை தி.மு.க.,வினர் செய்யத் துவங்கி உள்ளனர்.
பள்ளியில் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு
ஜூலை 04,2008,18:33   IST
கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள பள்ளி வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அண்மையில் இந்த பகுதியில் தான் சி.பி.ஐ.,(எம்) கட்சி ஆதரவாளர்களுக்கும், பா.ஜ.க., ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் 7 பேர் பலியாயினர்.
அரசியலை விட தேச நலனே முக்கியம் : முலாயம்சிங் யாதவ்
ஜூலை 04,2008,18:09   IST
புதுடில்லி : டில்லியில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய யாதவ், அரசியலை விட நாட்டின் நலனே முக்கியம் என்று தெரிவித்தார். 39 எம்.பி.,க்களை கொண்ட சமாஜ்வாடி கட்சியின் ஆதரவை பெற காங்கிரஸ் முயன்று வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்‌ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றலாம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்திருந்த கருத்தை சுட்டிகாட்டிய முலாயம்சிங்யாதவ், ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் மற்றைய அங்கத்தினருக்கும் இக்கருத்தை எடுத்துரைக்க விருப்பதாக தெரிவித்தார். முலாயம்மின் இந்த கருத்து, சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் இணைவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் பிரகாசமாக இருப்பதையே காட்டுகின்றன.
பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தது அமெரிக்க பிரதிநிதிகள் குழு
ஜூலை 04,2008,17:58   IST
புதுடில்லி : இந்திய-அமெரிக்க நாடுகளுக்கிடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் இந்தியாவில் பரபரப்பு கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் காரி ஏக்கர்மேன் தலைமையிலான 6 பிரதிநிதிகள் அடங்கிய அமெரிக்க பார்லிமென்ட் குழு புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். சந்திப்பிற்கு பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஏக்கர்மேன் கூறியதாவது : தங்கள் சந்திப்பில் இருநாடுகளுக்கிடையேயுள்ள நல்லுறவு மேம்படுவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்ததாகவும், அணு ஆயுத ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை: இந்தியா-பாக்., எல்லையில் பதட்டம்
ஜூலை 04,2008,17:11   IST
ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-பாக் எல்லை பகுதியில் தீவிரவாதிகளால் ஐந்து ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அக்தர் மீதான தடை நீக்கப்பட்டது
ஜூலை 04,2008,16:53   IST
லாகூர் : பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப்அக்தர் மீதான தடையை லாகூர் ஐகோர்ட் நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதம் தளர்த்தப்படவில்லை.
கிருஷ்ணகிரி அணை திறப்பு
ஜூலை 04,2008,16:15   IST
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அணை, முதல் போக சாகுப‌டிக்காக இன்று திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அணையை திறந்து வைத்தார். இன்று முதல் 150 நாட்களுக்கு அணையிலிருந்து நீர் திறந்து விடப்படும் என தெரிகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களில் உள்ள சுமார் 10,000 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறுமென்று என்று பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு கெடு விதிக்கமுடியாது : இடதுசாரிகளுக்கு காங்., பதில்
ஜூலை 04,2008,15:46   IST
புதுடில்லி : டில்லியில் நடைபெற்ற இடதுசாரிகள் கூட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முடிவெடுக்க, மத்திய அரசுக்கு வருகிற 7ம் தேதி கெடு விதிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைமையிடம், அரசுக்கு கெடு விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்று தெரிவித்துள்ளது.
விம்பிள்டன்: பைனலில் வில்லியம்ஸ் சகோதரிகள்
ஜூலை 04,2008,15:45   IST
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதுகின்றனர். நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், லண்டனில் நடக்கிறது. இத்தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் டெமன்டிவாவையும், செரீனா வில்லியம்ஸ், சீனாவின் ஜீ ஜெங்கையும் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளனர். முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறியதால் மீண்டும் வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவர் சாம்பியன் பட்டத்தை வெல்ல காத்திருக்கின்றனர்.
கோவையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 3 பேர் சாவு
ஜூலை 04,2008,15:09   IST
கோயம்புத்தூர் : கோவையில் நூற்பாலை அருகே, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முத்துப்பாண்டி, லட்சுமி, வீரபாண்சடி ஆகிய மூன்று பேரும் மின் கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் மின் கம்பியில் கால் வைத்தனர். மின்சாரம் தாக்கி 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
ஜூலை 04,2008,14:29   IST
ஜெயின்ட் கிட்ஸ்: ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி முதல் மூன்று போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்று 3-0 என முன்னிலை வகிப்பதோடு, தொடரையும் தன்வசப்படுத்தியது. இந்நிலையில் இந்த அணிகள் மோதும் 4வது ஒருநாள் போட்டி ஜெயின்ட் கிட்சில் நடக்கிறது. ஏற்கனவே தொடரை இழந்த நிலையில் சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் போராடும் என்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு இன்றைய போட்டியிலும் கடும் சவால் காத்திருக்கிறது.
நியூசிலாந்திடம் வீழ்ந்தது ஸ்காட்லாந்து
ஜூலை 04,2008,14:28   IST
அபர்தின்: நியூசிலாந்து வேகங்கள் மிரட்ட முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் ஸ்காட்லாந்து 101 ரன்களுக்கு சுருண்டது. ரோஸ் டெய்லரின் அதிரடி கைகொடுக்க, நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் ஸ்காட்லாந்தில் நடக்கிறது. நேற்று அபர்தினில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். வேகத்தில் அசத்திய கில்லஸ்பி, ஸ்காட்லாந்தின் துவக்க வீரர்களான ஹாமில்டன் (6), வாட்சனை (0) விரைவில் பெவிலியன் அனுப்பி வைத்தார். ஹசியா 18, பூனியா 15, கவுடி 17 இரட்டை இலக்கத்தை தொட்டனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஸ்காட்லாந்து அணி 33.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. எளிய இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணிக்கு புல்டன் (4), மெக்கலம் (22) மோசமான துவக்கம் தந்தனர். அடுத்து வந்த ரோஸ் டெய்லர் அதிரடியாக விளையாடினார். 34வது பந்தில் அரைசதம் கடந்து அசத்தினார். டெய்லர் 61 (2 சிக்சர், 8 பவுண்டரி), ஸ்டைரிஸ் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து 14.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஜகன்நாதர் ரதயாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பலி
ஜூலை 04,2008,14:26   IST
ஆமதாபாத் : ஜகன்நாதர் கோவில் ரதயாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜகன்நாதர் கோவில் ரதயாத்திரையை துவங்கி வைத்தார் நரேந்திரமோடி
ஜூலை 04,2008,13:58   IST
ஆமதாபாத் : குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, பாரம்பரியம் மிக்க ஜகன்நாதர் கோவில் 131வது ரத யாத்திரையை கொடி அசைத்து துவங்கி வைத்தார். 14 கிலோமீட்டர் தூரம் ரத யாத்திரை நடைபெறுகிறது. ஜகன்நாதர், பலராம், சுபத்ராதேவி ஆகியோரது சிலைகள் ரதயாத்திரையின் போது எடுத்துவரப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் ரதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர். அலங்கரிக்கப்பட்ட யானைகளும், வாகனங்களும் சூழ்ந்து வர ரதயாத்திரை வன்னமயமாக காட்சியளித்தது. பக்தர்களுக்கு வினியோகிப்பதற்காக 35,000 கிலோ பிரசாதம், கோவில் நிர்வாகம் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அணுசக்தி ஒப்பந்தம் : மத்திய அரசுக்கு இடதுசாரிகள் ஏழாம் தேதி கெடு
ஜூலை 04,2008,13:50   IST
புதுடில்லி : டில்லியில் இன்று இடதுசாரிகள் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கான தேதியை முடிவு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தின் முடிவில் மத்திய அரசு சர்வதே அணுசக்தி முகமையிடம், அணுசக்தி ஒப்பந்தந்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்களுக்கு ஒப்புதல் வாங்கப்போகிறதா இல்லையா என்பதை தெரிவிக்க ஜூலை ஏழாம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 14ம் தேதி முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரம் நடத்துவதற்கும் இடதுசாரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? நடிகர் கார்த்திக்‌ பதில்
ஜூலை 04,2008,13:10   IST
மதுரை : அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வீர்களா என்ற கேள்விக்கு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் பதில் அளித்துள்ளார். மதுரையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு கட்சிகள் தம்மிடம் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும், அரசியலில் எதுவும் நடக்கலாம், என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அணுசக்தி ஒப்பந்த பிரச்னைக்காக கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று கூறி வரும் கம்யூனிஸ்ட்கள், மக்களின் அத்தியாவசிய பிரச்னைக்காக கூட்டணியை விட்டு விலகுவோம் என்று சொல்லாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். பார்வர்டு பிளாக் கட்சியில் தவறுகள் நடக்கிறது. உறுப்பினர் சேர்க்கைக்கு கூட வ‌ட மாநில தலைவர்களை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலைதான் இருக்கிறது எனது புதிய கட்சியில் அப்படி பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால் கவனமுடன் நிர்வாகிகளை நியமித்து வருகிறேன், என்றும் நடிகர் கார்த்திக் கூறினார்.
அடுத்த 20-20 உலக கோப்பையில் இருந்து ஜிம்பாப்வே நீக்கம்
ஜூலை 04,2008,13:02   IST
துபாய் : அடுத்த 20-20 உலக கோப்பையில் இருந்து ஜிம்பாப்வே வெளியேற்றப்பட்டது. அடுத்த 20-20 உலக கோப்பை 2009ல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் ஜிம்பாப்வே வெளியேற்றப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற ஐ.சி.சி., கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்படவில்லை. அது தொடர்ந்த ஐ.சி.சி., உறுப்பினராகவே இருந்து வரும் என ஐ.சி.சி கூறியுள்ளது.
ஜூலை 6ம் தேதி முதல் அத்வானி தேர்தல் பிரசாரம்
ஜூலை 04,2008,12:56   IST
புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்காக ஜூலை 6ம் தேதி முதல் அத்வானி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அத்வானி நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தேர்தலுக்கான பிரசாரத்தை குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து துவங்க உள்ளார். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில் அவர் தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கிறார். இதற்கு முன் 6 முறை காந்திநகர் லோக்சபா உறுப்பிĪ