சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் தகவல்
தொடர்புக்கு தபால் சேவையை தான் பெருமளவில் சார்ந்திருந்தோம்.
இன்டர்நெட், மொபைல் என தகவல் பரிமாற்றம் எளிதாகிவிட்ட
பின்னர் இன்றும் கோடிக்கணக்கான பார்சல்கள், கடிதங்களை உரிய
இடத்தில் கொண்டு சேர்க்க தபால் சேவை நம்பகமானதாக உள்ளது.
இந்தியாவில் ஏறத்தாழ 1 லட்சத்து 55 ஆயிரம் தபால்நிலையங்கள்
உள்ளன. இது உலகிலேயே அதிகம். தபால் சேவைக்கு மதிப்பளிக்கும்
வகையில் ஆண்டுதோறும் அக்., 10ம் தேதி தேசிய தபால் தினம்
கொண்டாடப்படுகிறது.