யார் இவர்கள்...!  

தாகூர் (1861-1941): இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய பெருமை பெற்றவர் தாகூர். இலக்கியத்துக்காக அரும்பணி ஆற்றியவர் இவர். தனது படைப்பான கீதாஞ்சலிக்கு 1913 ல் நோபல் பரிசை பெற்றார். இவரது விடுதலை கவிதைகள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இயற்கையை ரசிக்க குழந்தைகளுக்கு க ற்றுக்  கொடுக்க  வேண்டும் என வலியுறுத்தினார். கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரது மனைவி மிருணாளினி தேவி. இவர்களுக்கு 2 மகன்கள் 3 மகள்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்து பிரிட்டிஷ் அரசின் நைட்ஹுட் பட்டத்தை திருப்பி அளித்தார்.