சபரிமலை: சபரிமலையில், ஆடி மாத பூஜைகள் துவங்கின. ஜூலை, 21-ம் தேதி இரவு, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.ஆடி மாத பூஜைகளுக்காக, 16-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, சபரிமலை நடை திறக்கப்பட்டது. அன்று பூஜைகள் நடக்கவில்லை. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின், தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய் அபிஷேகத்தை துவங்கி வைத்தார். தொடர்ந்து, கணபதி ஹோமம், வழக்கமான நித்ய பூஜைகள் நடந்தன. ஜூலை, 21 இரவு, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். அதுவரை, தினமும் மதியம் உச்சபூஜைக்கு முன் களபபூஜை, இரவு, 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும்.
இதற்கிடையே, பம்பையில் அகண்ட நாம ஜெபம் துவங்கியது. ஐயப்ப சேவா சங்கத் தலைவர் முன்னாள், எம்.பி., பாலகிருஷ்ணபிள்ளை துவக்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.