அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த, ராஜபுரம் சாலையானது, குண்டும், குழியுமாக உள்ளன. இந்த வழியாக, மதுரை, திண்டுக்கல்லில் இருந்து அரவக்குறிச்சிக்கு, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, டூவீலர்களில் ஏராளமான பொதுமக்கள், அரவக்குறிச்சி நகருக்கு வேலைக்கு செல்கின்றனர். அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். எனவே, ராஜபுரம் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.