எலும்புக்கு, வயிறுக்கு, கண்ணுக்கு, மனநலத்துக்கு, மகப்பேறுக்கு, இயற்கை வைத்தியத்துக்கு, ஆயுர்வேதத்துக்கு என உறுப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தனியார்களால் நடத்தப்படும் பிரமாண்ட மருத்துவமனைகளால், கோவை நகரில் மருத்துவ சுற்றுலா (மெடிக்கல் டூரிசம்) மாபெரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.
ஆனால், நூறாண்டுக்கு முன்பே, கொங்கு நாட்டு மக்கள் எல்லோருக்கும் இலவச சிகிச்சையை வழங்கி, ஏழைகளின் இதயத்தில் இடம் பிடித்த ஒரே மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான சி.எம்.சி.தான். ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில், சிறிய கட்டடத்தில் ஆரம்ப சுகாதார மையமாக துவக்கப்பட்டது இந்த மருத்துவமனை.
1909 ஜூலை 14லிருந்துதான், தற்போதுள்ள இடத்தில் மாவட்ட முதன்மை மருத்துவமனையாக செயல்படத் துவங்கியது. இப்போது 20 ஏக்கர் நிலப்பரப்பில் 68 கட்டடங்களில், 92 வார்டுகள், இந்த மருத்துவமனையில் செயல்படுகின்றன; மொத்தம் 1,500 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2009ல் நூற்றாண்டு கண்டது இந்த மருத்துவமனை; நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள கட்டடம், புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டது அப்போதுதான். திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய அண்டை மாவட்டங்களிலிருந்தும், தண்ணீர் தர மறுத்து சண்டை போடும் கேரள மாநிலத்தில் இருந்தும் தினமும் இங்கே வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும், கிட்டத்தட்ட எட்டாயிரம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.