கோவை அரசு கலைக் கல்லூரி, 1852ல் சாதாரண பள்ளியாக துவங்கப்பட்டது. அப்போது அதன் பெயர் "பிரெஞ்சு ஸ்கூல்'. கோவையில் ஆங்கிலம் கற்பிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட இப்பள்ளியை, அன்றைய மாவட்ட கலெக்டர் தாமஸ், "ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி' என பெயர் மாற்றினார். பின்னர் தாமஸ் ஆங்கிலோ இந்திய பள்ளி என அறியப்பட்டது.
1867ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின், முதல் முறையாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை இப்பள்ளியில்தான் கோவை மாணவர்கள் எழுதினர். அதன் பின் ஆண்களுக்கான இடைநிலைக் கல்லூரியாக மாறியது. பின்னர் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் கைவிடப்பட்டன. முதலில் ராஜவீதியிலும், பின்னர் மணிக்கூண்டு அருகேயும் செயல்பட்ட இக்கல்லூரி, அரசு கல்லூரியாக ஏற்கப்பட்டு, 1931ல் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டது.
முதலில் இன்டர் மீடியேட் வகுப்புகள் மட்டுமே இக்கல்லூரியில் நடத்தப்பட்டன. 1946ல் கோவையில் முதல் பட்டப் படிப்பு இக்கல்லூரியில்தான் துவங்கியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.