கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் ரோட்டில் அழகிய சமண ஆலயம் உள்ளது. கோவையில் உள்ள சுவேதாம்பர சமண சங்கத்தினரால், சமண சமயத்தின் 23 வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்காக 1981ம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது பளிங்கினால் ஆன மாளிகையாக பளிச்சிடுகிறது.
இங்கு வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள பார்சுவநாதர், மகாவீரர், சாந்தி நாதர், சுமதி நாதர், ஆதி நாதர் முதலிய சமண தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும். இவை பளிங்கினால் ஆனவை . கட்டடத்திற்கு வேண்டிய இதர பளிங்குக் கற்களும் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.
ஆலயத் தூண்களுக்காக, அரத்தினால் அறுக்கக்கூடிய அளவிற்கு மென்மையான கற்கள், காந்தி பிறந்த மண்ணான போர்பந்தரிலிருந்து கொண்டு வரப்பட்டன.
சமணர் கட்டட சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஆலயம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமணர் ஆலயத்தை விட சிறப்பு மிக்கதாய் கருதப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.