ஆங்கிலேயர் காலத்தில் எழுப்பப்பட்ட பல தேவாலயங்கள், அக்காலத்தின் கட்டடக்கலையைப் பறை சாற்றுவதாகவுள்ளன. கத்தோலிக்க சபையின், பேராலயமாகக் கருதப்படும் (கதீட்ரல்) புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குச்சேவை, கி.பி.1850 ல் தொடங்கியது; ஆனால், தேவாலயம், 1867 ல் கட்டப்பட்டது. கோவை நகரின் எழில் மிக்க பண்பாட்டு சின்னங்களில் இதுவும் ஒன்று.
நஞ்சப்பா சாலையிலுள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், 1935 ல் தோற்றுவிக்கப்பட்டது; காந்திபுரம், புனித பாத்திமா அன்னை தேவாலயம், தடாகம் ரோடு புனித அருளானந்தர் ஆலயம், சவேரியார் பாளையம் பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், புலியகுளத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கோவைப்புதூர் குழந்தை யேசு ஆலயம் ஆகியவை கத்தோலிக்க ஆலயங்களில் குறிப்பிடத்தக்கவை.
தென்னிந்திய திருச்சபையினருக்கான (சி.எஸ்.ஐ.) ஆலயங்களில் சிறப்பு மிக்கது, இம்மானுவேல் தேவாலயம். இவ்வாலயம் கி.பி. 1831 ல் கட்டப்பட்டது. 1880 ல் இதன் கட்டடப்பகுதி விரிவு படுத்தப்பட்டது. இந்த ஆலயத்தின் வளாகத்தில், ஆங்கிலேயர்கள் பலரின் கல்லறைகள் உள்ளன. பந்தயச்சாலையிலுள்ள அனைத்து ஆன்மாக்கள் ஆலயம், 1872ல் கட்டப்பட்டது.
ஆங்கிலேயரால் கட்டப்பட்ட அதே பாரம்பரிய அழகுடன் உள்ள இந்த ஆலயத்தில், இன்றைக்கும் ஆங்கில மொழியில் ஆராதனை நடக்கிறது. திருச்சி சாலையிலுள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் 1910 ல் கட்டப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.