ஒரு சிறையால் ஊருக்கே நன்மை கிடைக்கிறது என்றால், அது எத்தனை பெரிய சிறப்பு?. அந்த சிறப்பை உடைய சிறை, கோவை மத்திய சிறைதான். கோவையில் வலம் வரும் பல லட்சம் வாகனங்கள் கக்கும் கரியமில வாயுவை, பிராணவாயுவாக மாற்றும் பல ஆயிரம் மரங்களைக் கொண்டிருப்பதுதான் இந்த சிறையின் சிறப்பு.
சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகளுக்காக ஏராளமான மரங்கள்வெட்டி வீழ்த்தப்பட்ட இந்த நகரின் பசுமைப்பரப்பாக இருப்பது, இந்த சிறை வளாகம் மட்டுமே. தமிழகத்தில் அமைக்கப்பட்ட மிகப்பழமையான சிறைகளில் இதுவும் ஒன்று. 1872ல் இச்சிறைச்சாலை 167.76 ஏக்கர் பரபரப்பளவில் கட்டப்பட்டது. இச்சிறையில் ஒரே நேரத்தில் 2,208 பேரை அடைக்கும் இடவசதி உள்ளது.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலர் இச்சிறையில், கடும் சித்ரவதையை அனுபவித்துள்ளனர். கப்பலோட்டிய தமிழன் என புகழ்பெற்ற வ.உ.சிதம்பரனார் இச்சிறையில் இழுத்த செக்கு, அவர் நினைவாக சிறையின் முன் பகுதியில் பாதுகாக்கப்படுகிறது. இச்சிறையின் கண்காணிப்பாளராக முருகேன் உள்ளார்; சிறைத்துறை டி.ஐ.ஜி.,ஆக இருக்கிறார் கோவிந்தராஜன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.